
கணணியில் பணியாற்றிக் கொண்டிருக்கையில் ஏதேனும் வேறு ஒரு வேலைக்காக எழுந்து செல்ல வேண்டியதிருக்கும். வேலையின் தன்மையைப் பொறுத்து இந்த கால அவகாசம் இருக்கும்.
அப்போது கணணியில் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டுச் செல்வோம். இடையே வந்த வேலையை முடித்து பின் மீண்டும் அதனைத் தொடர்வோம். இந்த கால நேரத்தில் மொனிட்டரை ஸ்விட்ச் ஆப் செய்திட வேண்டுமா?
வேலை பார்க்காத போது மொனிட்டர்களை ஆப் செய்திட வேண்டிய கட்டாயம் சில ஆண்டுகளுக்கு முன்னால், நாம் மோனோகுரோம் எனப்படும் கருப்பு வெள்ளை திரை கொண்ட மொனிட்டர்களைப் பயன்படுத்துகையில் இருந்தது.
இந்த மொனிட்டர்களில் ஏதேனும் ஒரு காட்சியை அப்படியே விட்டுச் சென்றால், அது திரையிலேயே பதிந்து காட்டப்படும்.
ஆனால் காலப்போக்கில் இதற்கான மாற்று வழிகள் இருந்தன. ஸ்கிரீன் சேவர்கள் கிடைக்கப்பெற்று, அவை அசையும் தோற்றத்தைக் கொடுத்தன. ஆனால் இப்போது எல்.சி.டி திரைகளுடன் மொனிட்டர்கள் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன. எனவே பழைய பிரச்னை இல்லை.
இருந்தாலும் சிலர் ஸ்விட்ச் ஆப் செய்வதைப் பரிந்துரைக்கின்றனர். இதற்குக் காரணம் எல்.சி.டி. திரையின் பயன்பாட்டுக் கால ஆயுளை அதிகப்படுத்தத்தான். ஒரு எல்.சி.டி. திரை ஏறத்தாழ ஒரு லட்சம் மணி நேரங்கள் பிரச்னையின்றி இயங்கும்.
இது எவ்வளவு நாளாக இருக்கும்? உங்கள் எல்.சி.டி திரையினை 24 மணி நேரமும் இயங்கும்படி வைத்தால், பத்து ஆண்டுகளில் அதன் பயன்பாடு 85 ஆயிரம் மணியாக இருக்கும். அப்படி என்றால் நாம் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதே இல்லை, அல்லவா.
கணணி பயன்படுத்தாத போது நாம் சிபியு எனப்படும் கணணியின் முதன்மைப் பகுதியை ஆப் செய்கிறோம். ஏனென்றால், அதன் தேய்மானத்தைக் குறைக்க இது உதவிடும். சிபியுவில் சிறிய நகரும் சாதனங்கள், மின்சக்தியைக் கடத்தும் பகுதிகள் உள்ளன.
எந்த வேலையும் இல்லாத போதும் இவை குறிப்பிட்ட அளவில் இயங்கிக் கொண்டு தான் இருக்கும். இதனால் இவற்றின் தேய்மானம் தொடர்ந்து கொண்டே இருக்கும். மேலும் மின்சக்தி எந்நேரத்திலும் அதிகமாகும் வாய்ப்பு உண்டு. அந்த நேரத்தில் சி.பி.யு.வின் பகுதிகள் எரிந்து போகும் அல்லது கெட்டுப் போகும் வாய்ப்புண்டு.
மேலும் நாம் புரோகிராம்களை இயக்குகையில் அவற்றின் இயக்கத்தினை நிறுத்திய பின்னரும், சில கோப்புகள் ராம் மெமரியில் தங்குகின்றன. இவை அடுத்தடுத்து நாம் மேற்கொள்ளும் செயல்பாட்டினை தாமதப்படுத்துகின்றன. எனவே கணணியை ஸ்விட்ச் ஆப் செய்து இவற்றை ராம் மெமரியிலிருந்து நீக்கி, மெமரியை புத்தாக்கம் செய்வது நல்லது.
இப்போது நமக்குக் கிடைக்கும் மின்சக்தி நிர்வாக புரோகிராம்கள்(Power Management Programs) இதனை செட் செய்திடும் வழிகளைத் தருகின்றன.
குறிப்பிட்ட நேரம் நாம் செயல்படாமல், கீ போர்ட் மற்றும் மவுஸ் இயக்காமல் இருந்தால் தானாகவே மொனிட்டர் மற்றும் சிபியுவிற்குச் செல்லும் மின்சக்தியை நிறுத்தி வைக்கும் வகையில் ஆப்ஷன்கள் உள்ளன. இவற்றை செட் செய்து வைப்பதும், சிபியு மற்றும் மொனிட்டர்களின் வாழ்நாளை நீட்டிக்கும்.
Computer
News paper
Free Games
News website
Popular Posts
-
திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு எடுக்கப்படும் புகைப்படங்களை வீடியோவாக மாற்றம் செய்து கொள்வதற்கு ஒரு மென்பொருள் உதவி புரிகிறது. இ...
-
Skype சேவையை உலகெங்கும் பலர் இணைய வழியாக பேசுவதற்கும் வீடியோ காலிங் செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்...
-
இனி Pendrive 'ஐ Hard Disk ஆக பயன்படுத்தலாம். USB Drive 'ல் நிறைய மென்பொருள்களை எடுத்து செல்வோம். ஆனால் அதை கணினியில் நிறுவிய ப...
-
கணினியில் பணியாற்றும் போது பல்வேறு விதமான டாக்குமெண்ட்களை கையாளுவோம், ஒரு சில பைல் பாமெட் கொண்ட் பைல்களையே அதிகமாக பயன்படுத்துவோம் குறிப்ப...
-
Windows XP நம்மவர்கள் அதிகம் பயன்படுத்தும் OS. என்னதான் windows 7 வந்துவிட்ட போதிலும் இதை நாம் மறக்கவில்லை. எப்போதும் OS இன்ஸ்டால் பண்ணுவ...
-
தற்பொழுது தகவல்களை சேமிக்க பெருமாலானவர்களால் பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை வெவ்வே...
-
விண்டோ இயக்கமுறைமையில் தொடுதிரை வசதியை அளிப்பதற்காக Pen flicks .என்ற இந்த வசதி பயன்படுகின்றது இதனை செயற்படுத்திடுவதற்காக மேஜைத்திரையின் க...
-
தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்றாக ஜபோன் இப்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஜபோன் கெமராவில் ஒரு விசேட மென்பொருள...
-
வீடியோ எடிட்டிங் செய்யும் நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி அதாவது நம் வீடியோவை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் காட்ட ஒரு இலவச மென்ப...
-
உலகில் கோடிக்கணக்கான கம்ப்யுட்டர் இருந்தாலும் ஒவ்வொரு கணினிக்கும் ஒரு குறியீடு எண் கொடுத்து பிரித்து வைத்துள்ளனர். இதுவே ஐ.பி எண்(Int...
| Online Readers: |


